ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல் – DEO உத்தரவு!
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. தற்போது தீவிர ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்கு பின்னர், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு Reaction reply – புதிய அப்டேட்!
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்கள், அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நேற்று மாலை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் குறிப்பிட்ட பள்ளி திறக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது.
TN Job “FB Group” Join Now
இதனால் அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் இது குறித்து கவனிக்க உத்தரவிட்டார். மேலும், எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினால் கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சுற்றறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, ஏதேனும் ஓர் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். மேலும் உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை அல்லது வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.