தெற்கு ரயில்வேயில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 – 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Stenographer, Computer Operator And Programming Assistant and Desk Top Publishing Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Southern Railway(NAPS) |
பணியின் பெயர் | Stenographer, Computer Operator And Programming Assistant and Desk Top Publishing Operator |
பணியிடங்கள் | 55 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தெற்கு ரயில்வே பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Stenographer, Computer Operator And Programming Assistant and Desk Top Publishing Operator பணிக்கென 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
தெற்கு ரயில்வே கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.