ரயில் பயணிகள் கவனத்திற்கு – 12ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்! ரயில்வே வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 12ம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்ய திட்டமிடுவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம்:
தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. அதில் ஒன்று தான் ரயில்வே அறிவிப்புகள். கோடை விடுமுறையை முன்னிட்டு இரு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதனால் ரயில்வே துறையும் பல வித சலுகைகளை மக்கள் நலத்தினை கருத்தில் கொண்டு அளித்து வருகிறது.
PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைத்தொகை வரவில்லையா! இதை செய்யுங்க!
தற்போது வரும் ஜூன் மாதம் 12ம் தேதி தமிழகத்தில் பலரும் கொண்டாட இருக்கும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த முறை தமிழக அரசு எந்த வித ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் இருப்பதால் கண்டிப்பாக பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு தற்போது தெற்கு ரயில்வே ஒரு அசத்தல் அறிவிப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 12ம் தேதி பொதுமக்கள் கோவில்களுக்கு செல்ல எதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
திருநெல்வேலியில் இருந்து காலை 11.15-க்கு புறப்படும் மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றுயடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பதிவில்லாத ரயில் என்றும் கூறப்பட்டுள்ளது.