PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைத்தொகை வரவில்லையா! இதை செய்யுங்க!
இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 11ஆவது தவணை தொகையை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இவர்கள் தவணை தொகையை பெற என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவணைத்தொகை:
இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
10ஆவது தவணைத்தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. அடுத்தாக 11 வது தவணை மே 31 ஆம் தேதி வழங்கப்பட்டது. இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற்றனர். கிசான் திட்டத்திற்கு அரசு மொத்தம் ரூ.21,000 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 11 – வது தவணைத்தொகை நிறைய பேருக்கு வரவில்லை. இது குறித்து விவசாயிகள் புகாரளித்து வருகின்றனர். கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் பணம் கிடைக்காது. மேலும் வங்கிக் கணக்கு, ஆதார் போன்ற விவரங்கள் சரியாக அப்டேட்டில் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
தற்போது பிஎம் கிசான் 11 -வது தவணைத்தொகை பெறாதவர்கள் pmkisan இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் தவணைத்தொகை குறித்து புகார் அளிக்க 011-24300606. 18001155266, 155261, 011-23381092, 23382401, 011-24300606 ,0120-6025109 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.