இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் – 10 தனித் தீர்மானம் முன்மொழிவு!
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டமானது இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் முதல்வர் தனி தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறப்பு கூட்டம்:
தமிழக அரசின் பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் நவம்பர் 13 ஆம் தேதி அவற்றை அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இந்னிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதில் ஆளுநர் அனுப்பி வைத்த பத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்குவது, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவது போன்ற பத்து மசோதாக்களை முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தனி தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியதுடன் முதல்வர் தனது உரையில், தனது உடல் நலனை விட மக்கள் நலனை முக்கியம் ; கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் முயற்சிகள் நடக்கிறது; சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி உருவாவது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து; மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது; அவசர அவசியம் கருதியே இன்றைய சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும தெரிவித்துள்ளார்.