தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு? – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு? - அமைச்சர் விளக்கம்!
தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு? - அமைச்சர் விளக்கம்!
தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு? – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கல்லூரி கவுரவ ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு குறித்த கேள்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பதில் அளித்துள்ளார்.

தகுதி தேர்வு:

தமிழகத்தில் மாணவர்களின் தொடக்க கல்வியில் இருந்து உயர்கல்வி வரை மிகவும் நல்ல தரத்தில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு முதற்கட்டமாக மாணவர்களுக்கு நல்ல அறிவை வளர்க்க, கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஆரம்ப நிலை ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர்கள் வரை அனைவருக்கும் தமிழக அரசு தகுதி தேர்வை பிரிவு வாரியாக நடத்தி வருகிறது.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! முதலீட்டாளர்கள் ஹாப்பி!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்வி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வுகளை மட்டுமே எழுத வேண்டும் என்றும், கவுரவ ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு தேர்வுகளை நடத்த முடியாது என்றும் பதில் அளித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!