தமிழக PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஏப்ரல் 28 முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு!
தமிழ்நாட்டில் 38.25 லட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கடன் அட்டை:
இந்தியாவில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 6000 ரூபாய் வீதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். இதுவரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் தொகையை பெற உரிய வழிமுறைகளை ஆன்லைனில் முடிக்க வேண்டும்.
நாட்டில் நாளை முதல் ஏப். 26 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 38.25 லட்சம் விவசாயிகள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. முதல் நாளான ஏப்ரல் 24 அன்று நடக்க உள்ள முகாமில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூட்டுப்பொருளாக பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த முகாமில் இதுவரை பிஎம் கிசான் திட்டத்தில் சேர்ந்து கடன் அட்டை பெறாதவர்கள் பெறலாம் என்று வேளாண்மை-உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. கடன் அட்டை திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பைப் பொறுத்து மாறுபடும். விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள் 3 லட்சம் வரை கடன் பெற முடியும்.