நாட்டில் நாளை முதல் ஏப். 26 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில காலம் நீட்டிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு முதல் உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ExamsDaily Mobile App Download
மேலும் கொரோனாவின் முதல், இரண்டாம், மூன்றாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு ஜீரோ கோவிட் பாலிசி பின்பற்றப்படுவதால் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் சீனாவில் ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய கல்வி அமைச்சகத்தில் வெளியான வேலைவாய்ப்பு – ரூ.2 லட்சம் ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அதனால் ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை முதல் வருகிற 26ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சீன அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பு குறையும் சமயத்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.