தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதால் அதனை தடுக்க சிறப்பு குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வகுப்பு ஆசிரியர்களுக்கும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுதலின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதாவது, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை லேசாக கண்டித்தாலும் கூட உடனே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திற்கு தான் தள்ளப்படுகின்றனர். சிறிய பிரச்சனை என்றாலும் அதனை சமாளிக்கும் திறன் மாணவர்களுக்கு போய்விட்டது. மாணவர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் மன ரீதியாக தைரியமாக அதனை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என அவ்வப்போது குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும். இது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் செயல்பாடுகளில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் அந்த மாணவனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரசு மருத்துவ கல்லூரிகளில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்க தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சதுரகிரிக்கு செல்லவுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – ஆக. 27ம் தேதி வரை அனுமதி!
Exams Daily Mobile App Download
மேலும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் நடத்தையில் ஏதெனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்கொலை மட்டுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பிரச்சனை குறித்து பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகாவது மாணவர்களின் தற்கொலை விகிதம் குறைய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்