சதுரகிரிக்கு செல்லவுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – ஆக. 27ம் தேதி வரை அனுமதி!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஆவணி மாத அமாவசை வழிப்பாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி:
தமிழகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும். அத்துடன் 18 சித்தர்களின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பல சித்த மருத்துவர்கள் இங்கு வந்து மூலிகைகளை சேகரித்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிப்பாடு நடைபெறும். இத்தகைய நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
கடந்த தமிழ் மாதமான ஆடி அமாவாசையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் ஆவணி மாத அமாவாசை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூகைகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து பக்தர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
PM kisan விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் – சூப்பர் அறிவிப்பு! முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு மலைப்பகுதியில் இரவு நேரங்களில் பக்தர்கள் தங்க கூடாது. அதனை தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்