திருப்பதியில் ஏன் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது தெரியுமா? முழு விவரங்களுடன்!
திருப்பதியில் லட்டு ஏன் இவ்வளவு சிறப்பாக பேசப்படுகிறது எனவும், எதற்காக திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது எனபதற்கான வரலாறு அனைத்தும் இப்பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு:
திருப்பதி என்றாலே பலருக்கும் லட்டு தான் நியாபத்திற்கு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் இரண்டு, மூன்று நாட்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இப்படி சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் லட்டு கிடைத்தாலும் திருப்பதி லட்டின் சுவைக்கு ஈடாக இருப்பதே இல்லை.
NEET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மே 27 வரை திருத்தம் செய்ய வாய்ப்பு!
அது மட்டுமல்லாமல் திருப்பதி லட்டு தரமானதாகவும், உற்பத்தி மற்றும் அளவு, நறுமணம் அனைத்தும் இருக்கிறது. திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் முதலில் பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் விரைவில் கெட்டுப்போக கூடியவை என்பதற்காக கடந்த 1803 ஆம் ஆண்டிற்கு பிறகு லட்டு உதிரியாக பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் பூந்தியை உருட்டி லட்டாக பிரசாதம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த ஒரு லட்டு தயாரிக்கவே 51 பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இத்தனை பொருட்கள் பயன்படுத்துவதால் மட்டுமே திருப்பதி லட்டின் சுவை தூக்கலாக இருக்கிறது. 5,100 லட்டுகள் தயாரிக்க மட்டுமே 852.5 கிலோ பொருட்கள் பயன்படுத்துகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான லட்டு செய்யும் பணியை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக லட்டுகளே வழங்கப்படுகிறது. தற்போது தேவஸ்தானமே லட்டு தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.