NEET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மே 27 வரை திருத்தம் செய்ய வாய்ப்பு!
இந்தியாவில் ஜூலை 17ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் விண்ணப்பங்களை திருத்தம் செய்ய மே 27ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மற்றும் பல் மருத்துவ போன்ற படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியான பிறகு இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த வருடம் நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். பிறகு மதிப்பெண் தரவரிசையின் படி கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.
Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதே போல நடப்பாண்டு ஜூலை 17ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ஏராளமானோர் விண்ணப்பித்தனர். தற்போது விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது நீட் தேர்வு விண்ணப்ப படிவத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் தேர்வர்கள் அதனை சரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வர்கள் மே 24 முதல் 27ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்ப படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தேதி முடிந்த பிறகு திருத்தங்களை செய்ய இயலாது. அதனால் தேர்வர்கள் கவனமாக விவரங்களை உள்ளிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு பதிவில் விண்ணப்பிக்கவும், அதனை திருத்தம் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.