Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெண்களுக்கான ஒரு சூப்பரான சேமிப்பு திட்டத்தை பற்றி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இந்த திட்டத்தில் உள்ள பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

சேமிப்பு திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் சாமானிய மக்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் தற்போது பெரும்பாலான சேமிப்புதாரர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இரட்டிப்பு பலன்களை பெற முடிகிறது. மேலும் அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் இணைகின்றனர்.

வேளாங்கண்ணி டூ எர்ணாகுளம் இடையே ஜூன் 4 முதல் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், பெண் குழந்தைகளுக்கென்று சுகன்யா சம்ரிதி திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைவதன் மூலமாக குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால செலவினங்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இதில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்து கணக்கு தொடங்கலாம்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 250 முதல் அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 15 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்தை கொண்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இந்த பெண் குழந்தையின் 18 வயது நிறைவடையும் போது சேமிப்பு பணத்தில் இருந்து 50 சதவீத வரை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் பெண்ணின் திருமணத்திற்கு எந்த இழப்பீடு இல்லாமல் சேமிப்பு தொகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முதிர்வு காலம் முடிவதற்கு முன் சேமிப்பு பணத்தை பெற விரும்பினால் சில நிபந்தனைக்குட்பட்டு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன் பெற்று கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!