தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் – 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

0
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் – 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவ மழையால், கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பருவமழை மீண்டும் தீவிரம்:

வழக்கமாக, தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது. அதாவது தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறையத் தொடங்கியது. பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. மேலும் ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது. பின்னர் மாநிலத்தின் மலையோர பகுதிகளில் மட்டும் லேசாக மழை பெய்து வந்தது.

தமிழக தற்காலிக ஆசிரியர் நியமனம் – திருப்தி அளிக்கவில்லையெனில் ‘டிஸ்மிஸ்’! உத்தரவு பிறப்பிப்பு!

இந்நிலையில் 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் முதல் 5-ந் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உட்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!