பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் சௌந்தர்யா – இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க சௌந்தர்யா தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரூபா ஸ்ரீ சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. அம்மா இல்லாமல் தவித்த கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்து வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆரம்பத்தில் சௌந்தர்யாவுக்கு கருப்பாக இருக்கும் யாரையுமே பிடிக்காது. கருப்பாக இருப்பவர்கள் சௌந்தர்யாவின் கையை தொட்டாலே அவர்களை ஒரு வழி செய்துவிடுவார். அந்த அளவுக்கு கருப்பாக இருப்பவர்களை வெறுத்து கொண்டிருந்தார். இதனால் கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்தும் கூட கண்ணம்மாவை வேலைக்காரி போல தான் நடத்தி வந்தார்.
Exams Daily Mobile App Download
அப்போது கண்ணம்மாவிற்கு முழுக்க முழுக்க பாரதி தான் துணையாக இருந்து வந்தார். பின்பு, சிறிது சிறிதாக கண்ணம்மாவின் நல்ல மனதை சௌந்தர்யா உணருகிறார். பின்பு, கண்ணம்மா கர்ப்பமானதும் பாரதிக்கு சந்தேகம் என்கிற ஒரு நோய் வந்து தொற்றி கொண்டது. இது என்னுடைய குழந்தை இல்லை என கூறி கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்தினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார். பாரதி வீட்டை விட்டு கண்ணம்மாவை துரத்தினாலும் கண்ணம்மாவுக்கே தெரியாமல் பல உதவிகளை செய்து வந்தார்.
புகழின் கையை உடைத்த குக் வித் கோமாளி குழுவினர் – கண்ணீர் விட்ட புகழ்! ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது வரைக்கும் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க சௌந்தர்யா முயற்சி செய்து வருகிறார். சௌந்தர்யாவை போல ஒரு மாமியாரை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு சௌந்தர்யா தனது மருமகள் கண்ணம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். இப்படி இருக்கையில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரூபா ஸ்ரீ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக புதுமுக நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.