விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் சரவணன், ஸ்ரேயாவிற்கு திருமணம் எப்போது? அவரே சொன்ன பதில்!
ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ரேஷ்மா, மதன் ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்து ஸ்ரேயா ஜோடி முதன்முதலில் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றனர்.
சித்து ஸ்ரேயா:
சின்னத்திரை சீரியல்களில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்து திருமணம் ரியல் ஜோடியாக மாறிய பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானவர் ரேஷ்மா. இவருக்கு ஜோடியாக தினேஷ் முதலில் நடித்தார். அவரது தம்பியாக நடித்தவர் தான் மதன். இருவரும் சீரியலில் நடித்ததன் மூலமாக நட்பு ஏற்பட்டு சில காலம் நண்பர்களாக இருந்தனர்.
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு கடை திறப்பு விழாவில் சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!
அதன் பின் புத்தாண்டு அன்று இருவரும் காதலிப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இருவருக்கும் எப்போது திருமணம் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கடந்த வாரம் நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் என ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன் பின் அவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்தில் புதிதாக திருமணமான ஆர்யன் ஷபானா ஜோடியும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பல ரசிகர்களை கவர்ந்த சித்து ஸ்ரேயா ஜோடி, ரேஷ்மா- மதன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களுக்கு திருமணம் என கேட்க முதலில் வெட்கப்பட்ட சித்து சீக்கிரமாக என சொல்லி இருக்கிறார். மேலும் ரேஷ்மா மதன் ஜோடிக்கு வாழ்த்துக்களை அவர் தெரிவித்து இருக்கிறார்.