ஒற்றை, இரட்டை எண் முறையில் பேருந்துகள் இயக்கம் – அரசுக்கு கோரிக்கை!
கேரளாவில் ஒற்றை, இரட்டை எண் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பேருந்துகள் இயக்கும் முறை:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க கேரள அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முக்கிய இடத்தில் உள்ளது. பாதிப்பும், உயிர் பலியும் தினசரி அதிகரித்தது. அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
ஜூலை 1 முதல் தடுப்பூசி செலுத்திய ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதி!
இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலமாகவே கேரளாவில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. பேருந்துகளில் 50 % பயணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாம் அலைநோய் பரவல் விகிதம் குறைந்து வருவதால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில் திங்கட்கிழமை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்லாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஒற்றைப் படை தேதிகளில் ஒற்றைப்படை எண் கொண்ட பேருந்துகளும், இரட்டைப் படை தேதிகளில் இரட்டைப் படை எண் கொண்ட பேருந்துகளும் இயக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் நடப்பு காலாண்டிற்கான சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு வைத்துள்ளனர்.