ஜூலை 1 முதல் தடுப்பூசி செலுத்திய ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதி!
அசாம் மாநில அரசு ஜூலை 1ம் தேதி முதல் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்ட மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
அசாம் அரசின் அறிவிப்பு:
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 22ம் தேதி வரை மாநிலத்தில் அமலில் உள்ளது. முன்னதாகவே சில மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் சாதாரண அலுவலக நேரங்களின்படி ஜூலை 1ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க – முடக்கப்படும் சேவைகள்!
அசாம் அரசு திங்கள்கிழமை முதல் அடுத்த 10 நாட்களில் தினமும் 3 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்தில் அரசு பணிகள் எதுவும் இருக்காது என்றும், முழு அரசு இயந்திரங்களும் தடுப்பூசி வேலைகளில் ஈடுபடும் என்றும் முதல்வர் கூறினார். அடுத்த 10 நாட்களுக்கு தினமும் குறைந்தது 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தடுப்பூசி போடும் இலக்கை நாங்கள் அடைந்தால் ஜூலை மாதத்திற்கான தடுப்பூசிகளை மத்திய அரசு நிச்சயம் வழங்கும்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் அசாமில் பாதி மக்கள் தொகையினர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பார்கள். மேலும், தடுப்பூசி மையங்கள் நகர்ப்புறங்களில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி நேர ஷிப்டிலும், கிராமப்புறங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் செயல்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.