தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் கால அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேர்வுக்கு தயாராகும் சில குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் தான் வெகு நாட்களாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். அதிலும் சிலருக்கு இந்த ஆன்லைன் கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இவருக்கு உதவும் வகையில் அரசு சார்பாக கல்வி தொலைக்காட்சிகள் தொடக்கப்பட்டு அந்த சேனலில் 24 மணிநேரமும் வகுப்பு வாரியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு நேரடி மற்றும் வகுப்பறை கல்வியின் தேவையை உணர்ந்து அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பள விவரம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போது மூன்றாம் அலை பாதிப்புகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் 1 – 12 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன் படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் தேர்வு தேதி வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி உயர்வு!
தற்போது உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு தேதியை அறிந்து அதற்கேற்றவாறு படிக்க வேண்டிய பாடங்களை முதலில் தீர்மானம் செய்ய வேண்டும். அதற்கு பாடத்திட்டம் உங்களுள் உதவும் அதில் உள்ளவற்றை மட்டும் படித்து கொள்வது நல்லது. உங்களுக்கென ஒரு அத்தனையை தயார் செய்து அதில் எந்தெந்த தினங்களில் எந்த பாடத்தை படித்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வேண்டும். அதனை தினசரி பின்பற்ற வேண்டும். முடிந்தளவு அதிகாலை நேரம் புதிய பாடங்களை படிப்பது சால சிறந்தது. ஏனெனில் தூங்கி எழுந்தவுடன் படிப்பது நினைவாற்றலை அதிகப்படுத்தும். தேர்வுக்கு முன்பாக சில நாட்களை படைத்ததை நினைவு கூற ஒதுக்கிட வேண்டும். சிறப்பான திட்டமிடலின் மூலம் தேர்வுக்கு மாணவர்கள் தயாரானால் வெற்றியை அடையாலாம்.