மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் அகவிலைப்படி (DA) உயர்வு?
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படி (DA) உயர்வுத் தொகையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
நாட்டில் தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது குறித்த முக்கிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இது குறித்த ஊடக செய்தியை நம்பினால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மீண்டுமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது.பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான DA வருடத்திற்கு ஜனவரி மற்றும் ஜூலை மாத அடிப்படையில் இரண்டு முறை அறிவிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகை கடந்த மார்ச் மாதம் 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வுத்தொகை இன்னும் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்த சூழலில் ஏழாவது நிதிக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை 2022 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
அந்த வகையில் இம்முறை அரசு ஊழியர்களுக்கு மொத்த அகவிலைப்படி தொகை 38 அல்லது 39 சதவீதமாக உயர்வடையும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில், 1 புள்ளி உயர்வுடன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்திற்கான AICIP குறியீடு அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் கூடுதல் உயர்வை கண்டால் அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 39%ஐ எட்டும். இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.