PM KISAN திட்டத்தில் இணைவதற்கான எளிய வழிமுறைகள் – முழு விவரங்கள் இதோ!
PM-KISAN திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எப்படி PM கிசான் திட்டத்தில் இணைவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM-KISAN திட்டம்:
மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அதாவது, இந்தியாவில் நிலம் வைத்திருக்கும் அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது. அதாவது, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இணைந்த அனைத்து விவசாயிகளுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இது வரைக்கும் PM-KISAN திட்டத்தின் மூலமாக 11 தவணைக்கான நிதியுதவி பணத்தை விவசாயிகள் பெற்றுவிட்டனர். அடுத்ததாக 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது எப்படி பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் PM-KISAN ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான pmkisan.gov.in என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் B.Ed படிப்பை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பின்பு, ஃபார்மர்ஸ் கார்னர் என்கிற பகுதியை கிளிக் செய்து புதிய விவசாயி பதிவு என்கிற பகுதிக்குள் நுழைய வேண்டும். பின்பு, அதில் உள்ள கிராமப்புற விவசாயி பதிவு அல்லது நகர்ப்புற விவசாயி இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும். பின்னர், ஆதார் எண், மொபைல் எண்ணை பதிவு செய்து மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து Get OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்களது மொபைல் எண்ணிற்கு பெறப்பட்ட OTP எண்ணை பதிவு செய்து மாநிலம், மாவட்டம், வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், ஆதார் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து நில விவரங்களை பதிவு செய்து சேமி என்பதை அழுத்தவும். இதனை சரியாக செய்துவிட்டாலே PM-KISAN திட்டத்தில் இணைந்துவிடலாம்.