தமிழகத்தில் B.Ed படிப்பை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் B.Ed படிப்பில் 3ம் பருவத்தில் பயிலும் 2ம் ஆண்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று கற்றல், கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு CEO அலுவலகங்களில் தனியாக அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த நடைமுறையை ரத்து செய்து அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.
B.Ed மாணவர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 750க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நடப்பு கல்வியாண்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பொதுவாக B.Ed படிப்பில் 3ம் பருவத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று கற்றல், கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதற்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் CEO அலுவலகங்களில் அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறையில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இதனை ரத்து செய்ய ஆசிரியர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று கற்றல், கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்த பயிற்சிகளை வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த பட்டியலை தயார் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் இதில் குறிப்பிட்டுள்ள பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அல்லது பள்ளிகளை அணுக வேண்டிய அவசியமில்லை என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.