ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – புதிய உத்தரவு!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு - புதிய உத்தரவு!
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு - புதிய உத்தரவு!
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – புதிய உத்தரவு!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மலிவு விலையில் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை பெற உதவும் வகையில் ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் புதுவையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அனைத்து நலத் திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஒன்றாக உள்ளது. அதனால் அனைவரும் ரேஷன் கார்டை பெறுவதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது ரேஷன் கார்டை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து பெற அரசு வழிவகை செய்துள்ளது. இந்த நிலையில் புதுவை காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வாழ்க்கை தரம் மேன்மை அடைந்து தன்னிறைவு பெற்றால் அவர்கள் தங்களின் கார்டை ஒப்படைத்து அதற்கு பதிலாக மஞ்சள் நிற ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

மாநிலத்தில் அதிரடியாக 144 தடை உத்தரவு – அச்சத்தில் பொதுமக்கள்

இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு அரசு சிவப்பு நிற ரேஷன் கார்டை வழங்க முடியும். இந்த அறிவிப்பிற்கிணங்க சமூக பொறுப்புள்ளவர்கள் தாங்களாவே முன்வந்து அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்க்க வேண்டும். மேலும் சிறந்த முறையில் அரசு செயல்படவும் மேலும் தகுதியானவர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தும் சென்றடையவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு ரேஷன் கார்டை தற்போது வசதி படைத்தோரும் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!