தமிழகத்தில் வங்கி விடுமுறை குறித்து வெளியான ஷாக்கிங் தகவல் – அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!
நாடு முழுவதிற்குமான வங்கிகள் விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை என்று வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கி விடுமுறை:
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்தின் படி தான் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கான விடுமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. வருட தொடக்கத்திலேயே மொத்த மாதங்களுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில், தேசிய விடுமுறைகள் மட்டும் தான் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில், தற்போதையை அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மொத்தம் 21 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த தகவல்கள் பரவி வந்த வண்ணம் இருந்தது. இதனால் தமிழக வங்கி அதிகாரிகள் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளனர்.
இந்தியாவில் இன்று முதல் இத்தனை நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம் – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட Jio!
Exams Daily Mobile App Download
அதன்படி, அக்டோபர் 4ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 5ம் தேதி விஜயதசமி மற்றும் அக்டோபர் 24 தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே தேசிய விடுமுறை, இதைத்தவிர மாதத்தின் 2 மற்றும் 4ம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை ஆகிய அனைத்தும் சேர்ந்து 10 நாட்கள் மட்டுமே அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்