இந்தியாவில் இன்று முதல் இத்தனை நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம் – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட Jio!
இந்தியாவில் அதிவேக தொலைத்தொடர்பு சேவையான 5ஜி சேவையை கடந்த அக். 1 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த சேவை முதற்கட்டமாக 4 நகரங்களில் இன்று முதல் தொடங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.
5ஜி சேவை
நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 4ஜி சேவையில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து 5ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் 6-வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை, பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், VI, அதானி குழுமத்தின் அதானி டேட்டா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஜியோ நிறுவனம் ஜி சேவை தொடங்கப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்த உடன் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் 5ஜி சேவை கொண்டுவரப்பட இருப்பதாக ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக். 5) முதல் இந்தியாவில் 4 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை – வெளியான சூப்பர் தகவல்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. அதன் பின் மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் கருத்துக்களை பெறுவதற்கு முதற்கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்தில் தற்போது 425 மில்லியன் பயனர்கள் இருக்கும் நிலையில் இந்த 5ஜி சேவையால் இன்னும் அதிகமாக Jio-வில் பயனர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்