IT நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் நியமனத்திலும், சம்பளம் நிர்ணயம் செய்வதில் மீண்டும் தனது ஆதிக்கத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முக்கியமான ஆட்டோமேஷன் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த ஆட்டோமேஷன் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை தரம் உயர்வது மட்டும் அல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என்பது ஆகும்.
ஷாக் நியூஸ்:
கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்கள் முழு ஊரடங்கு காரணமாக இருந்த இடம் கூட தெரியாமல் முடங்கியது. அந்த அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை தொழில் நிறுவனங்கள் சந்தித்து. இருப்பினும் ஒரே ஒரு துறை மட்டும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கொரோனா காலத்தில் இயங்கியது, அந்த துறை தகவல் தொழில்நுட்ப துறை ஆகும். கொரோனா காலத்திலும் பணிகளில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க WORK FROM HOME முறையை அறிமுகப்படுத்தியது. இன்று வரை இந்த நடைமுறை சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தற்போது இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் அடுத்தடுத்து வெளியேறும் காரணத்தால் அதிகச் சம்பளத்தைக் கொடுத்து புதிய ஊழியர்களையும் அல்லது பழைய ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், பதவி உயர்வு கொடுத்துத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த நடைமுறை ஐடி நிறுவனங்களின் லாபத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. இதனால் புதிய நடைமுறை ( ஆட்டோமேஷன்) ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை குறைவது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தைப் பார்க்க முடியும். இந்நிலையில் ஐடி சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகம், பணிகளில் தினசரி நடைமுறையில் இருக்கும் பணிகளை ஆட்டோமேஷன் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? தேர்வர்கள் அதிருப்தி!
இந்த ஆட்டோமேஷன் மூலம் ஊழியர்களின் பணி சுமை குறைவது மட்டும் அல்லாமல் ஊழியர்களின் தேவையும் பெரிய அளவில் குறையும். இந்த வகையில் இன்போசிஸ் சுமார் 24000 பாட்களை வைத்து தனது சேவையின் தரத்தையும் வேகத்தையும் மேம்படுத்தி வருகிறது. மேலும் இன்போசிஸ் பாட் பேக்டரி (Bot Factory) உருவாக்கத் திட்டமிட்டு உள்ளதாக இன்போசிஸ் உயர் தலைவர் எஸ் ரவி குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் தங்களது பணியில் ஆட்டோமேஷன் உடன் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற சேவைகளை அதிகளவில் சொந்த நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்குச் சேவையிலும் பயன்படுத்தி வருகிறது.