ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – விதிகள் மாற்றம்!
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறுவதற்காக ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சில புகார்கள் வந்ததை அடுத்து தற்போது ரேஷன் கார்டு விதிகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் குறைவான விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அந்த வகையில் தகுதியுடையவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வசதி படைத்தோர்களும் ரேஷன் கார்டு மூலம் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இவர்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்ற மளிகை பொருட்கள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி அவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் – SMC செயலி குறித்த முக்கிய அறிவிப்பு!
இதனால் உண்மையில் தகுதி பெற்ற ஏழை மக்களு ரேஷன் பொருட்களும் அரசின் சலுகைகளும் கிடைக்காமல் போகிறது. இந்த நிலையை சரி செய்ய மத்திய உணவு வழங்கல் துறை ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்ற உள்ளது. இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனையடுத்து விரைவில் வறுமைக் கோட்டின் தரத்தை அரசு மாற்றப் போவதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் மூலம் வறுமை கோட்டின் பட்டியலில் இருந்து பலரும் வெளியேற வாய்ப்புள்ளது.
Exams Daily Mobile App Download
விதிகளை மாற்றிய பிறகு புதிய தரநிலைகளை அமல்படுத்திய பின் தகுதியான பயனாளிகளின் பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் நடைபெறும் மோசடிகள் தவிர்க்கப்படும். மேலும் தகுதியுடைய மக்களுக்கு சரியாக பொருட்கள் சென்றடையும். அத்துடன் வறுமைக் கோட்டு பட்டியலில் இருந்து பலர் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்