Shawarma பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – தமிழகம் முழுவதும் தொடரும் ரெய்டு! தரமற்ற இறைச்சிகள் பறிமுதல்!
ஷவர்மா சாப்பிட்ட கேரள மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஷவர்மா இறைச்சி உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவு பாதுகாப்புத்துறை திடீர் ரெய்டு:
அண்மையில் கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அம்மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதித்ததில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்ததும், அப்பெண் உயிரிழப்புக்கு அந்த பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில்,தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடந்த வாரம் ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிரமெடுக்கும் ‘அசானி’ புயல் – சென்னையில் தொடரும் கனமழை, 10 விமானங்கள் ரத்து!
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு அபராதம் மூடி விதித்து சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர், குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்பதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து சேலம் மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 19 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 13 ஆயிரம் அபராதம் மற்றும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து விழுப்புரத்தில் செயற்கை வண்ணம் பூசப்பட்ட 18 கிலோ சவர்மா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 3 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஷவர்மா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மருத்துவர் ஒருவர் கூறியது, ஷவர்மாவில் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், இது கற்றல் மற்றும் நினைவக உருவாக்கத்துடன் தொடர்புடைய மூளை செயல்பாடுகளை தடுத்து மூளை பெப்டைட்களுக்கு வழிவகுக்கும். இந்த விஷயங்கள் நினைவாற்றல் இழப்பு மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுப்பதோடு, மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களின் பாதிப்புகளையும் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.