தீவிரமெடுக்கும் ‘அசானி’ புயல் – சென்னையில் தொடரும் கனமழை, 10 விமானங்கள் ரத்து!
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த அசானி புயலின் காரணமாக பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை:
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் தினசரி வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்து வந்தது.
WhatsApp குரூப் அட்மின்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய அப்டேட் அறிமுகம்!
இவ்வாறு நிலவும் கடுமையான வெப்பத்தால் மக்கள் சிரமப்பட்டு வந்த நேரத்தில் அசானி புயல் காரணமாக வெப்பம் தணிந்து தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. புரசைவாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்கம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதே போல எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், அடையாறு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக காலநிலை மாற்றம் அடைந்துள்ளது. அதனால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.