ஷபானா தான் எனக்கு எல்லாமே, எனக்கு மனைவியாக கிடைத்ததெல்லாம் வரம் – ஆர்யன் வெளியிட்ட பதிவு!
சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறந்த மனைவி என்பதற்கு ஷபானாவை ஆர்யன் டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷபானா & ஆர்யன்:
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செம்பருத்தி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பெயரையும், புகழையும் பெற்றவர் தான் ஷபானா. இவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யனும் காதலித்து வந்தார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் ஒரு கோவிலில் வைத்து பெற்றோர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் பிரியப் போவதாக தகவல் வெளியானது. இருவரின் தரப்பிலிருந்தும் இந்த விவாகரத்து குறித்தான பதிவிற்கு எந்த விளக்கமும் அளிக்காததால் கண்டிப்பாக இருவரும் பிரிய போகிறார்கள் என வதந்திகள் மேலும் பரவத் தொடங்கியது. இதற்கு பிறகு ஷபானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்கு பிறகு ஆர்யனும் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகி விட்டார்.
புது வீடு வாங்கிய “பிக்பாஸ்” அனிதா சம்பத் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!
அவ்வப்போது இருவருமே சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேடைப்பேச்சாளர் கோபிநாத் கணவன்மார்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் மனைவி தான் இது எல்லாம் சரியாகி விடும் என சரியான நிலைக்கு மாற்றுவதும், அவர்களுக்கு துணையாக இருப்பதும் மனைவி மட்டுமே என கூறும் படியான வீடியோவிற்கு ஷபானாவை ஆர்யன் டேக் செய்து நீ எனது வாழ்க்கையில் இப்படிப்பட்டவள் தான். எனக்கு மனைவியாக நீ கிடைத்ததற்கு மிகவும் நன்றி எனவும் கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.