புது வீடு வாங்கிய “பிக்பாஸ்” அனிதா சம்பத் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!
சன் டிவியில் செய்திவாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் அனிதா சம்பத். அவர் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக வீடு வாங்கி இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனிதா சம்பத்:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக சாமானிய மக்கள் கூட அதிகம் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி கொண்டார். அதன் பின்னர், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி அடைந்திருந்தார். செய்தி வாசிப்பாளராக வேண்டும் என கனவுடன் இருந்த அவருக்கு திரைத்துறை வாய்ப்பு கிடைத்ததும் அதில் முழு திறமையையும் போட்டு பலரது கவனத்தை ஈர்த்தார்.
நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கடந்து வந்த பாதை பற்றி பேச அது வெளியே பலருக்கு பிடித்து போனது. மேலும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து இந்த இடத்தை பிடிக்க அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும் அதற்கு அவருடைய கணவர் பிரபா கொடுத்த ஆதரவு பற்றியும் அவர் அழகாக பேசி இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடனத்தின் மூலமாக பலரது மனதை கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதில் அவருக்கும் அவருடைய கணவருக்கும் சிறு வயது முதல் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாம். அதற்கான முயற்சிகளை போட்டு தற்போது அவர்கள் வீடு வாங்கி இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். கடந்த அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம் என நெகிழ்ச்சியான பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அவருடைய அந்த பதிவிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.