கொடைக்கானலில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு – பயணிகள் அவதி! தொடர் விடுமுறை எதிரொலி!
கொடைக்கானல் மலையில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளின் வரத்து காரணமாக கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் தட்டுப்பாடு:
தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை ( அக். 2 – காந்தி ஜெயந்தி) தொடர்ந்து மூன்று நாட்கள் அலுவலகங்களுக்கும் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணங்களை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி பொருட்கள் கிடைக்காது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இந்த தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதிக வாகனங்களின் வரத்து காரணமாக கொடைக்கானலில் பெட்ரோலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மூன்று பெட்ரோல் பங்குகள் அங்கு உள்ள நிலையில் ஒரு பெட்ரோல் பங்கில் மட்டுமே டீசல் மட்டும் உள்ளது. வாகனங்களுக்கான பெட்ரோல் கிடைக்காமல் கொடைக்கானலில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.