ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி பொருட்கள் கிடைக்காது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவில் தகுதி இல்லாத பலரும் ரேஷன் கார்டு திட்டத்தில் பயனடைந்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ரேஷன் கார்டு:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் நோக்கில் ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் மலிவு விலையில் மாதந்தோறும் உணவு பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். பல்வேறு தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பலரும் ரேஷன் கார்டை பெற்று பயனடைந்து வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தகுதியற்றவர்கள் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கார்டினை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.