பெட்ரோல் விலை ரூ.200… அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே கடுமையான கலவரம் வெடித்து கொண்டிருக்கு நிலையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருந்துகளுக்கு தட்டுப்பாடு:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்கிற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததால் கடந்த மே 3 ஆம் தேதியிலிருந்து கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகதினரிடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இந்த கலவரம் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்க்கு மேல் ஆகியும் தற்போது வரைக்கும் கலவரம் நீண்டு கொண்டிருக்கிறது.
38,480 Teachers காலிப்பணியிடங்கள் – ரூ.2,09,200/- ஊதியத்தில் சூப்பர் வேலை || முழு விவரங்களுடன்!
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இறப்புகளும் பதிவாகியிருக்கும் நிலையில் கலவரத்தின் காரணத்தினால் கடுமையான போக்குவத்து பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கலவரத்தினால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பெட்ரோல் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றன.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த பெட்ரோல் தட்டுப்பாட்டின் காரணத்தினால் மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலவரத்தின் போது மூடப்பட்ட மருந்து கடைகளும் தற்போது வரைக்கும் திறக்கப்படாத காரணத்தினால் போதுமான மருந்துகள் கிடைக்காமலும் போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் பிற மாநிலங்களில் இருந்தும் மணிப்பூர் மாநிலத்திற்கு மருந்துகள் கொண்டுவர முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.