தமிழகத்தில் இ சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அனைத்து அரசு சார்ந்த சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இ-சேவை மையங்கள்
தமிழகத்தில் தற்போது அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு முதல் ரேஷனில் பொருள்கள் வாங்குவது வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில தகவல் தொழில்நுட்ப துறையின், மின்னாளுமை முகமை மூலமாக பொது இசேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையம் மூலமாக அரசு சேவை மட்டுமில்லாமல், வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று போன்ற வருவாய்த்துறை சார்ந்த பல ஆவணங்களும் விண்ணப்பித்து பெறப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
அது மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் போன்ற வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 350 பொது இ சேவை மையங்களுடன் கூடுதலாக 550 இசேவை மையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பல சேவைகள் செய்ய வேண்டி இருப்பதால் தாலுகா அளவில் ஓரிரு ஆதார் சேவைகள் மட்டுமே இருக்கின்றன.
பெட்ரோல் விலை ரூ.200… அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!
அதனால் ஆதார் குறித்த பணிகளை செய்ய மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சர்வர் பிரச்சனை இருப்பதாக சொல்லி மக்களை அலைய விடுகின்றனர். அதனால் மக்கள் பலர் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களை நாடுகின்றனர். எனவே இ சேவை மையங்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடிவடிக்கை எடுத்து இருந்தாலும் ஆதார் சார்ந்த பணிகளை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.