விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘செம்பருத்தி’ ஷபானாவின் பதிவு – ரசிகர்கள் மகிழ்ச்சி!
சின்னத்திரை சீரியல் நடிகை ஷபானாவின் திருமணம் குறித்து பல வதந்திகளும் பரவி வந்த நிலையில், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஷபானா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் ஷபானா மற்றும் ஆர்யன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வதந்திகள்:
மீடியாவில் நல்ல விஷயங்களை விட பொய்களும், வதந்திகளும் அதிக வேகத்தில் பரவி விடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அவ்வப்போது அறிவித்து விடுகின்றனர். பல பிரபலங்கள் வதந்திகளை கண்டுகொள்வதில்லை. அவர்கள் வேலையை தொடர்ந்து செய்து வருவார்கள். கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட செம்பருத்தி ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி ஆர்யன் இருவர் குறித்தும் பல பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
“பிக்பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி அபிநய் வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்களுக்கு நன்றி!
ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் சின்னத்திரையில் வளர்ந்து வரும் பிரபலங்கள். இவர்கள் காதலிக்கும் செய்தியே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதை விட பெரிய அதிர்ச்சி அளித்த விஷயம் திடீரென்று தங்கள் திருமணத்தை அறிவித்தது. இருப்பினும், ஷபானா ஆர்யன் ஜோடியின் ரசிகர்கள் இவர்களின் திருமண வாழ்க்கைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ஷபானா மற்றும் ஆர்யன் இடையில் சண்டை என்றும், பிரிந்து விட்டார்கள். இரண்டு குடும்பத்திற்கும் பல்வேறு காரணங்களால் ஒத்துவரவில்லை என்றும், இதனால் ஷபானா மற்றும் ஆர்யன் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்றும் பல்வேறு செய்திகள் பரவி வந்தது.
பிக்பாஸ் வீட்டில் நிரூப் பிரியங்கா நட்பை சேர்த்து வைத்த ப்ரியங்காவின் தம்பி – வெளியான கடைசி ப்ரோமோ!
இந்த வதந்திகள் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலும் வராததால் இந்த வதந்திகள் அதிக அளவில் பரவி வந்தது. ரசிகர்களும் இதை உண்மை என்று நம்பும் அளவிற்கு செய்தி சமூக வலைத்தளங்களில் சுற்றி வந்தது. இந்நிலையில், ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி நடந்த நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த ஜோடிகளுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகிறது, மேலும் பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளியாக அமைந்து விட்டது. இதனால் இந்த ஜோடியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.