“பிக்பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி அபிநய் வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்களுக்கு நன்றி!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய அபிநய் இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அபிநய் பதிவு:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 18 வித்தியாசமான போட்டியாளர்களை களமிறங்கியது. அவர்களில் ஒருவர் தான் அபிநய். அவர் ஜெமினி கணேசன் அவர்களின் பேரன் ஆவார். அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது தான் முதல் அனுபவம். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் 78 நாட்கள் இருந்திருக்கிறார். 10 வாரம் நாமினேஷனில் வந்து அவரை ஓட்டு போட்டு இருக்க வைத்தனர். ஆனால் கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அவர் வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் நிரூப் பிரியங்கா நட்பை சேர்த்து வைத்த ப்ரியங்காவின் தம்பி – வெளியான கடைசி ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை பாவ்னி உடன் சில சர்ச்சைகள் இருந்தது. அதுவே அவர் வெளியேற முக்கிய காரணமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த பிக்பாஸ் வீட்டில் நான் இருந்ததற்கு நீங்க கொடுத்த அன்பு ஆதரவிற்கு நன்றி, நான் அப்படியே பூரிச்சு போய்ட்டேன். இந்த நிகழ்ச்சியில் நான் நினைவு வைத்திருக்க நிறைய இருக்கிறது. அதே போல நான் மறைச்சு புதைக்கவும் நிறைய இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ – ரசிகர்கள் வாழ்த்து!
கமல் சார் ஹோஸ்ட் பண்ண நிகழ்ச்சி என்றால் எந்த அளவிற்கு பிரபலம் இருக்கும் என கேட்கிறார். எனக்கு எப்பவும் அதிர்ஷ்டம் இல்லை நிகழ்ச்சி பாத்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும், ஆனால் என் குடும்பம் எனக்கு கிடைத்தது தான் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம், வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால் அது எல்லாமே வாழ்க்கையை நல்ல வழியில் கொண்டு செல்ல தான் இருக்கிறது. என் குடும்பத்தினர் என் மீது வைத்த பாசத்திற்கு நன்றி என சொல்லி இருக்கிறார்.