Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் & சிறப்பம்சங்கள்! முழு விவரம் இதோ!
பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு வரமாக வந்த திட்டம் போஸ்ட் ஆபீஸ் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதிக முதிர்வு தொகையை ஈட்டலாம். இந்த முதிர்வு தொகை, பெண் குழந்தைகளின் மேற்படிப்பு திருமணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடப்பட வேண்டியவை.
பணத்தை அள்ளி தரும் சேமிப்பு திட்டம்:
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக மக்கள் அதிக பாதுகாப்பு மற்றும் குறைவான ரிஸ்க் உள்ள திட்டங்களை தான் அதிகம் விரும்புகின்றனர். மேலும் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதத்தை தருகிறது. இந்த காரணத்தை முதன்மையாக வைத்து பொதுமக்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். பணத்தை சேமிக்க தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – மார்ச் மாதம் அட்டவணை!
இந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம்,பெண்கள் எதிர்காலத்திற்காக 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தாலும் இந்த திட்டத்தை தொடங்கி பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு பெண் குழந்தை வயது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்செயல் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்த திட்டத்தை தொடங்க தேவையான ஆவணங்கள் அடையாளச்சான்று, முகவரிச் சான்று, குழந்தையின் படம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் படம், பிறப்புச் சான்றிதழ் ஆகியவை ஆகும். இந்த திட்டத்தில் முதலீட்டுத் தொகை, வட்டி வருமானம், மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெண் குழந்தை 21 வயதை தொட்டபின் முதிர்வு தொகை கிடைக்கும். செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்ச தொகை கூட முதலீடு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.