பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த திருப்பம் – மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம்! ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதன்முறையாக முக்கிய கதாபாத்திரம் ஒன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து ப்ரோமோவில் காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியான பாக்கியாவின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் சீரியல்கள் என்றாலே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடக்கத்தில் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் அதன் பின் கோபியின் கிரிமினல் மூளையால் சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்தது.
பாக்கியவுடன் கோர்ட் வேலைகளை முடித்த கோபி, சந்தோஷத்தில் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய இருக்கிறார். சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்று சீரியலில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பாக்கியாவின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவர் விலகலுக்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 3 இல் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ப்ரோமோ ரிலீஸ்!
ஆர்யனுக்கு பதிலாக ராஜபார்வை சீரியல் புகழ் விகாஷ் சம்பத் களமிறங்கி இருக்கிறார். ஆனால் சீரியலில் இது பற்றி காட்டப்படாமல் இருந்தாலும் நேற்று வெளியான ப்ரோமோவில் செழியன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஆர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சீரியலில் இருந்து விலகியது குறித்து உறுதிப்படுத்தும் படி தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். மேலும் அதிகாரபூர்வ ப்ரோமோ வெளியானதால் அவர் சீரியலில் இருந்து விலகியது உறுதியாகி இருக்கிறது.