SEBI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க ஜன.24 கடைசி நாள்!
இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புகள்:
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI நிறுவனத்தில் General Stream, Legal Stream, Information Technology Stream, Research Stream, Official Language Stream பதவிகளில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 31.12.2022 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஜன.20 முதல் முழு ஊரடங்கு உத்தரவு கிடையாது – அரசு முக்கிய அறிவிப்பு!
அதனை தொடர்ந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு கல்வித்தகுதி மாறுபடும் என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் மட்டுமே தேர்வு மையம் தெரிவு செய்து நடத்தப்படும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.sebi.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000மும், SC, ST பிரிவினருக்கு ரூ.100ம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.24ம் தேதி கடைசி நாள். இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=199 என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.