தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!

0
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு - சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு - சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் கொரோனா மூன்றாம் அலையை பரவி பாதிப்புகளை அதிகப்படுத்திய வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் முயற்சியாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நோய் பரவல் நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – அசல் மதிப்பெண் சான்றிதழ்!

பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் போன்றவற்றில் 50% பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் நலன் கருதி 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதி அளித்துள்ளது மற்றவர்கள் வீட்டில் இருந்து பணிபுரியவும் அனுமதி அளித்துள்ளது. இதனை பின்பற்றி பல மாநிலங்கள் அரசு ஊழியர்களில் 50% பேர் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. அதே போல தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் அரசு தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைங்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • ஒவ்வொரு நபருக்கும் 2 மீட்டர் இடைவெளி உள்ளபடி பணியிடத்தை மாற்றியமைக்கவும்
  • கேண்டீன்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவும்.
  • கேண்டீனில் உணவு பரிமாறும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
  • அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்வதோடு, வாய், மூக்கு ஆகியவை முழுமையாக மறையும் படி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • ஊழியர்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று வரும் வாகனங்கள் கூட்டம் இல்லாத படியும் ஜன்னல்கள் திறந்தபடியும் இருக்க வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!