ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

0
ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - முதல்வர் அறிவிப்பு!
ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - முதல்வர் அறிவிப்பு!
ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானாவில் கொரோனா தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தெலுங்கானா மாநிலத்தில் முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்தார். கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கும்போது அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் அரசு பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளதால், பள்ளிகள் செயல்படத் தொடங்கும் முன் அவற்றை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் மற்றும் குளிர்காலத்தில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசுத்தொகுப்பு முறைகேடுகள்! பொதுமக்கள் புகார்!

தற்போது உத்தரபிரதேசம், ஹரியானா, மும்பை, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சமீப காலமாக ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முயற்சி ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவின் அல்லது மற்ற தடுப்பூசி போர்டல்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு? வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையத்திற்கு மாணவர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். பதிவு இல்லாமல் எந்த குழந்தைக்கும் தடுப்பூசி போடப்படாது. தெலுங்கானா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, தற்போது ஜனவரி 8 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி நடுப்பகுதி வரை விடுமுறை அளிக்கப்படும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!