தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசுத்தொகுப்பு முறைகேடுகள்! பொதுமக்கள் புகார்!
சேலம் மாவட்டத்தில் அரசு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் 21 வகை பொருட்களுக்கு பதிலாக 18 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதை அடுத்து ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடங்கிய இந்த திட்டம் இன்று அனைத்து பகுதியிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் தொடங்கியது. பொதுமக்கள் தங்களின் டோக்கன் மற்றும் ரேஷன் அட்டைகளை காண்பித்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு? வேகமெடுக்கும் கொரோனா பரவல்!
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வரிசையாக சமூக இடைவெளியை பின்பற்றி இலவச பொருட்களை பெற்று செல்லுமாறும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் அறிவுறுத்தி வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசுத்தொகை வழங்கவில்லை. ரொக்கப்பணம் வழங்காததற்கு எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை, செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
அங்கு சில கடைகளில் 21 வகை பொருட்களுக்கு பதிலாக 18 வகை பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மஞ்சள் பை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தில் நடைபெற்று வரும் முறைகேடு குறித்து ஆய்வு செய்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் முழுமையான பரிசுத்தொகுப்பு கிடைக்க செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.