தமிழகத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு? வேகமெடுக்கும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் 3வது அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதலால் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை, செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் செங்கல்பட்டு, கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை இந்த மாவட்டத்தில் 1,02,642 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1,00,587 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் 1730 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் வார இறுதி நாட்களில் 144 தடை விதிக்கவும் திட்டம் உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசத்தையும் வழங்கியுள்ளார்.