தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிகள் மூடப்படுமா?
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்ப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த செய்தி அறிந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கோவில்பட்டி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – துருக்கி அரசு உத்தரவு!
இதனால் சுகாதாரத்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்கள் 150 பேருக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமோ என கேள்வி எழுந்துள்ளது.