படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
படித்த மற்றும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய இளைஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமலில் உள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – துருக்கி அரசு உத்தரவு!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள். சேலம் மாவட்ட இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். ஊனமுற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி ஆன நிலையில் விண்ணப்பிக்கலாம்.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? மாநில அரசு ஆலோசனை!
இந்த உதவித்தொகையை பெற விரும்புவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.