தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!
தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தொடக்க நிலை மாணவர்களின் கல்வி நிலை கேள்வியாக உள்ளது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அப்போது அவர்களது கருத்துக்களை முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் மருத்துவ குழுக்களுடன் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. சுழற்சியில் முறையில் வகுப்புகள் நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு – BCCI அறிவிப்பு!
மேலும் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளை திறப்பது என்பது சவாலான விஷயம் என்று கூறுகின்றனர். பள்ளிகளை உடனடியாக திறந்து வகுப்புகளை தொடங்கவிட்டால் மாணவர்கள் கல்வியை நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு செல்வர், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கழக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.