தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் – எழும் புகார்கள்!
தமிழகத்தில் அரசு அறிவித்த தேதிக்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகளை தற்போது முழுவதுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கொரோனா முதலாம் அலை பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் உருவான 2ம் அலை பரவலால் வகுப்புகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. ஆனால், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தை சேர்ந்த அருமை நாதன் என்பவர் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதற்காகவே பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தொடர்ந்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், ‘அரசின் விதிமுறையை மீறி வகுப்புகளை நடத்துவது கல்வியை விட பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்துவதாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும் சில சமூக ஆர்வலர்கள், ‘நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான சூழல் நிலவி வருகையில் பாடத்திட்டத்தை குறிக்கோளாக கொள்ளாமல் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்’ என குறிப்பிட்டுள்ளனர்.