தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. இதற்கு மத்தியில் அடுத்தகட்டமாக நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 1 முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்க திறக்கப்பட உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் அதிக கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!
இது தொடர்பான அறிக்கைகளின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது மற்றும் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அடுத்தடுத்த பண்டிகைக் காலங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!
வழிகாட்டு நெறிமுறைகள்:
- அனைத்து கோவிட்-19 வழிகாட்டுதல்களும் பள்ளி வளாகத்தில் பின்பற்றப்படும்.
- சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்து அவர்களுடன் சானிடைசர்களை வைத்திருக்க வேண்டும்.
- பள்ளிக் கல்வித் துறை தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்து வகுப்புகளை முறையாக நடத்துவதற்கு பொருத்தமான நிலையான இயக்க நடைமுறைகளை பரிந்துரைக்கும்.
- தற்போது, தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்கள் புதிய நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளன. இந்த மாவட்டங்கள் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் செங்கல்பட்டு ஆகும். இதனால் அதிக கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.