தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கும் போது பயனர்களின் விரல்ரேகை தெளிவின்றி இருந்தால் ரேஷன் பொருளை வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள்

இந்தியாவில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் சிஸ்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டைகள் துவங்கி, பொருட்களை வாங்குவதற்கு விரல்ரேகை வைப்பது வரை அனைத்தும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த ஆண்டு முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் முறையால் பல ரேஷன் அட்டைதாரர்கள் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். அதாவது ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக விரல்ரேகையை பதிவு செய்யும் போது அதில் சில தெளிவின்மை காணப்படுவதால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இது தவிர பயோமெட்ரிக் முறையில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் கோளாறு காரணமாகவும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

இந்நிலையில் தெளிவின்மை காரணமாக பயோமெட்ரிக் பதிவில் ரேஷன் அட்டைதாரர்களின் விரல்ரேகையை பதிவிட முடியாவிட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருளை வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்க பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழக உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொழில்நுட்பக்கோளாறு நிமித்தமாக ஆதார் இணைப்பு பெற முடியாத சூழல் ஏற்பட்டால் பயனர்களுக்கு ரேஷன் பொருட்களை தர வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிக்கு பதிலாக ரேஷன் கடைக்கு வரும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு பொருட்களை அளிக்க வேண்டும். தவிர ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!